இலங்கை கிரிக்கெட் புதிய தேர்வுக்குழு அறிவிப்பு

National Cricket Selection Committee

463
National Cricket Selection Committee

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக் குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமித்துள்ளார்.

ஐந்து பேர் கொண்ட இப்புதிய கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் வீரர்களான தில்ருவன் பெரேரா, தரங்க பரணவிதான, அஜந்த மெண்டிஸ் மற்றும் இந்திக டி சேரம் ஆகிய நால்வரும் அதன் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் சபையானது இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவிற்கு பத்து பேரின் பெயர்களை அனுப்பியிருந்ததுடன், அதில் ஏழு பரிந்துரைகளுக்கு தேசிய தேர்வுக் குழுவின் தலைவர் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்படி, குறித்த ஏழு பரிந்துரைகளில், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஐந்து பேரை இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக் குழுவிற்காக பெயரிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் சபையினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையில் தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்கவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், தேர்வுக் குழுவின் புதிய தலைவராக உபுல் தரங்கவை நியமிக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் இதற்கு முன்னர் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • உபுல் தரங்க – தலைவர்
  • தில்ருவன் பெரேரா
  • தரங்க பரணவிதான
  • அஜந்த மெண்டிஸ்
  • இந்திக டி சேரம்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<