இலங்கையில் நடைபெற்றுவரும் வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளை ரசிகர்கள் இலவசமாக பார்வையிட முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் தகுதிபெற்றுள்ளன.
டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என்பவை கொழும்பு பி.சரா ஓவல் மற்றும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ளன.
குறித்த இந்த போட்டிகளை பார்வையிடுவதற்கு ரசிகர்கள் மைதானத்துக்குள் இலவச அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை A அணி தங்களுடைய அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் A அணியை நாளை வெள்ளிக்கிழமை (21) கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளதுடன் (காலை 10.00 மணி) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய A அணியானது பங்களாதேஷ் அணியை ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் (பி.ப. 02.00 மணி) எதிர்கொள்ளவுள்ளது.
இதேவேளை இறுதிப் போட்டியானது கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<