டில்சான் மதுசங்கவுக்கு அபராதம்!

3

லங்கா பிரீமியர் லீக் தொடரில் தம்புள்ள சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடிய டில்சான் மதுசங்கவுக்கு அவருடைய போட்டிக்கட்டணத்திலிருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 14ம்raa திகதி கோல் மார்வல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது LPL  விதிமுறையை மீறினார் என்ற குற்றத்துக்காக இவருக்கு போட்டிக்கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் மற்றும் ஒரு தரமிறக்கல் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கை – நியூசிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது

கோல் மார்வல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நிரோஷன் டிக்வெல்லவின் விக்கெட்டினை கைப்பற்றிய இவர், ஆக்ரோஷமான முறையில் அவரை வழியனுப்பி வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. 

இதனை தொடர்ந்து போட்டி மத்தியஸ்தர் மேற்கொண்ட விசாரணையில் தன்னுடைய தவறை ஏற்றுக்கொண்டதன் பின்னர் டில்சான் மதுசங்கவுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி இம்முறை LPL தொடரில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளை பெற்றிருந்ததுடன், கண்டி பல்கோன்ஸ் அணியை விட ஓட்ட விகிதம் குறைந்த காணரமாக பிளே-ஓஃப் சுற்று வாய்ப்பை தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<