ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்

17

ஜிம்பாப்வே ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளராக தென்னாபிரிக்காவினைச் சேர்ந்த சார்ள் லாங்கேவேல்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட் சபை (ZC) புதிய பயிற்சியாளர்களை நியமனம் செய்து வரும் நிலையில் அதன் அங்கமாகவே சார்ள் லாங்கேவேல்டின் நியமனமும் இடம்பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான சார்ள் லாங்கேவேல்ட் இதற்கு முன்னதாக தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு பயிற்சியாளராக பணி புரிந்த அனுபவத்தினை கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் காணப்பட்ட முன்னாள் துடுப்பாட்ட வீரரான Stuart Matsikenyeri ஜிம்பாப்வே அணியின் முழுநேர களத்தடுப்பு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகம் கடந்த மாதம் தமது அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக ஜஸ்டின் சம்மன்ஸை நியமனம் செய்த நிலையிலையே இரண்டு புதிய பயிற்சியாளர்களின் நியமனம் இடம்பெற்றுள்ளது.

அதேநேரம் புதிதாக நியமனம் பெற்றுள்ள இரண்டு பயிற்சியாளர்களும் இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் இருந்து தமது பயிற்றுவிப்பு கடமைகளை ஆரம்பம் செய்வார்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட T20I தொடர் நாளை (06) ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.