சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் ஷா நியமிக்கப்பட்டுள்ளார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய் ஷா எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி ஐசிசியின் தலைவராக பதவியேற்பார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
>>5 புதுமுக வீரர்களுடன் ஆஸி.யை சந்திக்கும் இங்கிலாந்து அணி<<
தற்போதைய ஐசிசியின் தலைவர் கிரெக் பார்க்லேவ் இம்மாதம் 20ம் மூன்றாவது முறையாக ஐசிசியின் தலைவர் பதவிக்காக போட்டியிடப்போவதில்லை என அறிவித்திருந்தார்.
எனவே ஐசிசி தலைவர் பதவிக்கு எந்தவொரு எதிர் போட்டியாளர்களும் இல்லாத நிலையில், ஒருமனதாக ஜெய் ஷா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெய் ஷா கடந்த 2019ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டதுடன், இதுவரையில் குறித்த பதவியில் நீடித்து வருகின்றார். அதுமாத்திரமின்றி ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவராகவும் இவர் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<