இலங்கை மகளிர் அணிக்கு டொலர்களை அள்ளிக்கொடுத்த SLC

Women’s T20 Asia Cup 2024

2

மகளிர் ஆசியக்கிண்ணத் தொடரில் முதன்முறையாக சம்பியன் கிண்ணத்தை வென்ற இலங்கை மகளிர் அணிக்கு இலங்கை கிரிக்கெட் சபை பரிசுத்தொகையாக ஒரு தொகை பணத்தை வழங்கியுள்ளது. 

அதன்படி இலங்கை கிரிக்கெட் சபை இலங்கை மகளிர் அணிக்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை பரிசுத்தொகையாக வழங்கியுள்ளது. 

T20I தொடரினைப் பறிகொடுத்த இலங்கை அணி

இலங்கை மகளிர் அணிக்கு வழங்கப்பட்டுள்ள பரிசுத்தொகை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை“ 2024 ஆசியக் கிண்ணத்தில் எங்கள் மகளிர் கிரிக்கெட் அணியின் அற்புதமான வெற்றியை அங்கீகரிக்கும் வகையில், இலங்கை கிரிக்கெட் 500,000 அமெரிக்க டொலர்கள் வெகுமதியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. உங்களின் அர்ப்பணிப்பு, குழுப்பணி, மற்றும் மைதானத்தில் வெளிப்படுத்திய போட்டித்தன்மை ஆகியவை நமது தேசத்திற்கு மகத்தான பெருமையைக் கொண்டு வந்துள்ளதுஎன குறிப்பிட்டுள்ளது. 

தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பலம் மிக்க இந்திய மகளிர் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றியினை பதிவுசெய்தது. 

குறித்த இந்த வெற்றியானது இலங்கை மகளிர் கிரிக்கெட்டின் அதிசிறந்த பெறுபேறாக மாறியுள்ளதுடன், இந்தப் போட்டி வெற்றியை இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<