பினுரவுக்கு மார்பு நோய் தொற்று; மருத்துவமனையில் அனுமதி

India tour of Sri Lanka 2024

2
India tour of Sri Lanka 2024

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் T20i நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

மார்பு நோய் (chest infection) தொற்றுக்குள்ளாகிய அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அதன்படி நாளை (27) நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான முதல் T20i போட்டிக்கான தேர்வுக்கு அவர் பரிசீலிக்கப்பட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பினுர பெர்ணான்டோ தற்போது பமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், தேவைப்பட்டால் அணிக்கு அழைக்கும் நோக்கில் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் ரமேஷ் மெண்டிஸை மேலதிக வீரர்களில் ஒருவராக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு எதிரான T20i தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அணியில் இடம்பிடித்த வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்துக்குள்ளாகும் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதன்படி, இதுவரை 3 வீரர்கள் இலங்கை குழாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, துஷ்மந்த சமீரவும் இந்தியாவுக்கு எதிரான தொடரை சுகவீனம் காரணமாக தவறவிட்டார், மேலும் நுவன் துஷாராவும் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுடனான T20i தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<