ILT20 புதிய தொடரில் எட்டு இலங்கை வீரர்கள்

74
ILT20 Season 3

ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் (ECB) உள்ளூர் லீக் தொடரான ILT20 தொடரின் புதிய பருவத்தில் இலங்கையைச் சேர்ந்த 8 வீரர்கள் தொடரில் பங்கெடுக்கும் அணிகள் மூலம் தக்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்<<

மூன்றாவது பருவத்திற்கான ILT20 தொடர் அடுத்த ஆண்டின் ஜனவரி-பெப்ரவரி மாத காலப்பகுதியில் (ஜனவரி 11 – பெப்வரி 09) இடம்பெறவிருக்கின்றது. அதன்படி இந்த புதிய தொடருக்காகவே ILT20 அணிகள் மூலம் இலங்கை அணியினைச் சேர்ந்த வீரர்கள் தக்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இதில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி மூலம் இலங்கை T20 அணியின் தலைவரான வனிந்து ஹஸரங்க தக்க வைக்கப்பட்டிருக்கின்றார். அதேநேரம் சரித் அசலன்கவினை அபுதாபி நைட்ரைடர்ஸ் அணி தமது குழாத்தில் நீடித்துள்ளது.

டுபாய் கெபிடல்ஸ் அணியானது தசுன் ஷானக்க மற்றும் துஷ்மன்த சமீர ஆகிய வீரர்களை தமது குழாத்தில் தொடர்ந்தும் வைத்திருப்பதோடு, தொடரின் நடப்புச் சம்பியன்களான MI எமிரேட்ஸ் அணியானது குசல் பெரேரா, விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகிய வீரர்களை தக்க வைத்துள்ளது.

இவர்கள் தவிர குசல் மெண்டிஸ் மற்றும் டில்சான் மதுசங்க ஆகிய வீரர்கள்களும் (சார்ஜா வோரியர்ஸ்) தக்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<