இங்கிலாந்தில் விளையாடவுள்ள விஷ்வ பெர்னாண்டோ

County Championship 2023

179

இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கௌண்டி சம்பியன்ஷிப் தொடருக்கான டர்ஹாம் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

டர்ஹாம் அணியின் கடைசி 2 போட்டிகளில் விஷ்வ பெர்னாண்டோ விளையாடவுள்ளதுடன், வொர்செஸ்டர்ஷயர் அணிக்கு எதிராக 19ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டிக்கான அணித்தெரிவில் இவர் இடம்பெறுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

>> ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

டர்ஹாம் அணியின் மெதிவ் பொட்ஸ் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோர் இங்கிலாந்து தேசிய அணியின் பணிப்பாக சென்றுள்ள நிலையில், விஷ்வ பெர்னாண்டோவை டர்ஹாம் அணி இணைத்துள்ளது.

விஷ்வ பெர்னாண்டோ டர்ஹாம் அணியின் மூன்று போட்டிகளில் விளையாடுவதற்கு ஆரம்பத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த போதும், அவருக்கான வீசா கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில், கடைசி 2 போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்ப்பு மாத்திரமே இவருக்கு கிடைத்துள்ளது.

இலங்கை அணிக்காக 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விஷ்வ பெர்னாண்டோ 50 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளதுடன், தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 2021ஆம் ஆண்டு ஜொஹன்னர்ஸ்பேக்கில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 101 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். டெஸ்ட் போட்டிகளில் இவருடைய சிறந்த பந்துவீச்சு பிரதியாக இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<