பிலிப்பைன்ஸில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அணிக்கு பதினைவர் கொண்ட ஆசிய 5 நாடுகள் றக்பி போட்டிகளில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியின் தலைவராக கண்டி விளையாட்டுக் கழக வீரர் ஃபஸில் மரிஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அணிக்கு எழுவர் கொண்ட இலங்கை அணியின் தலைவராக கடந்த சில வருடங்களாக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிங்ஸ்வூட் கல்லூரியின் முன்னாள் றக்பி வீரரான ஃபஸில் மரிஜாஇ இலங்கையின் பல வெற்றிகளில் பிரதான பங்காற்றியவராவார்.
இவர் ஃப்ளை ஹாஃவ் நிலை வீரராவார்.
பெனல்டிகள் மற்றும் மேலதிகப் புள்ளிகளுக்கான உதைகளை இலக்கு தவறாமல் உதைக்கும் ஆற்றல் மிக்கவர்.
இதேவேளைஇ ஆசிய 5 நாடுகள் றக்பி போட்டிகளுக்கான இறுதி குழாம் விரைவில் அறிவிக்கப்படும் என இலங்கை றக்பி கால்பந்தாட்ட ஒன்றியம் தெரிவித்தது.
சில வீரர்கள் உபாதையினால் பீடிக்கப்பட்டுள்ளதால் இறுதி குழாமை உடன் அறிவிக்கமுடியாதுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் இப் போட்டிகளை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட 40 வீரர்களைக் கொண்ட உத்தேச குழாம் தற்போது 28 வீரர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
ஆசிய 5 நாடுகள் போட்டியில் பிலிப்பைன்ஸ்இ இலங்கைஇ கஸகஸ்தான்இ சிங்கப்பூர் ஆகிய நாடுகள் விளையாடவுள்ளன.
பிலிப்பைன்ஸ் அணியில் வெளிநாட்டு வீரர்கள் அதிளவில் இடம்பெறுவதால் இலங்கை அணிக்கு அவ்வணி பெரும் சவாலாக அமையும் என நம்பப்படுகின்றது.