பங்களாதேஷ் அணியின் பயிற்றுநர் ஹத்துருசிங்க ஒழுக்காற்று விதிகளை மீறியுள்ளார்

143

அணி தெரிவு குறித்து விமர்­சித்­ததன் மூலம் ஒழுக்­காற்று விதி­களை பயிற்­றுநர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க மீறி­யுள்­ள­தாக பங்­களாதேஷ் கிரிக்கெட் செயற்­பாட்டுக் குழுத் தலைவர் நய்மர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார்.

 

இந்த விடயம் குறித்து பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபைக் கூட்­டத்தில் விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­க­வுக்கு எச்­ச­ரிக்கை கடிதம் ஏதும் வழங்­கப்­பட்­டதா எனக் கேட்­கப்­பட்­ட­போதுஇ உள்­ளக விட­யங்கள் தொடர்­பாக கருத்து வெளி­யிடத் தயா­ரில்லை என பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபையின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி நிஸா­முதின் சௌதரி பதி­ல­ளித்தார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளி­லி­ருந்து பங்­க­ளாதேஷ் வெளி­யேற்­ற­ப்பட்ட சில தினங்­களில் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க தனது கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்தார்.

இது குறித்து செய்தி­யா­ளர்கள் மத்­தியில் பேசிய அவர் தனக்கு வழங்­கப்­பட்ட குழாம் சிறந்­த­தல்­ல­ எ­னவும் அணி தெரிவு தன்னை மகிழ்­விக்­க­வில்லை எனவும் அதனால் அணியின் கூட்­டு­றவு பாதிக்­கப்­பட்­டது எனவும் கூறி­யி­ருந்தார்.

பங்­க­ளாதேஷ் குழாம் ஜன­வரி மாதம் அறி­விக்­கப்­பட்­ட­வுடன் அவர் தனது அதி­ருப்­தியை வெளி­யிட்­ட­துடன் சுழல்­பந்­து­வீச்­சாளர் ஜுபைர் ஹொசெய்ன் குழாமில் சேர்க்­கப்­ப­டா­த­மைக்கு தனது கடு­மை­யான விமர்­ச­னத்­தையும் வெளி­யிட்­டி­ருந்தார்.

தெரி­வா­ளர்கள் அவர்­க­ளது தொழிலை செய்ய அனு­ம­திக்­கப்­ப­ட­வேண்டும் எனவும் தனிப்­பட்ட வீரர் ஒரு­வ­ருக்கு சார்­பாக செயற்­ப­டு­வ­தா­னது அணி வீரர்கள் மத்­தியில் உள­ரீ­தி­யான தாக்­கங்­களைத் தோற்­று­விக்கும் எனவும் பங்­க­ளா­தேஷின் முத­லா­வது கிரிக்கெட் அணித் தலை­வரும் அந் நாட்டு கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபை பணிப்­பா­ள­ரு­மான நய்முர் றஹ்மான் சுட்­டிக்­காட்­டினார்.

‘‘அது அவ­ரது (ஹத்­து­ரு­சிங்க) தனிப்­பட்ட கருத்­தாகும்.

அது அவ­ரது முதிர்ச்­சி­யின்­மையை எடுத்­துக்­காட்­டு­கின்­றது.

எந்­த­வொரு பயிற்­றுநரும் இப்­படி பேசக்­கூ­டாது.

எந்­த­வொரு பயிற்­று­நரும் இவ்­வாறு பகி­ரங்­க­மாக கருத்­துக்­களை வெளி­யி­டக்­கூ­டாது.

அது ஆரோக்­கி­ய­மான விட­ய­மல்ல.

எவ­ருக்கு எதி­ரா­கவும் அவ­ருக்கு பேச அதி­காரம் இல்லை.

அவ­ரது கருத்­துக்கள் ஒழுக்­காற்று விதி­களை மீறு­வ­தாக அமைந்­துள்­ளது.

தெரிவுக் குழு அணியைத் தெரிவு செய்­யும்­போது அந்தத் தெரிவை கிரிக்கெட் செயற்­பாட்டுக் குழுத் தலைவர் சிபாரி செய்வார்.

அதன் பின்னர் அதனை கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபைத் தலைவர் அங்­கீ­க­ரிப்பார்.

எனவே தெரி­வுகள் சார்ந்த விமர்­ச­னங்கள் கிரிக்கெட் சபைக்கும் சபைத் தலை­வ­ருக்கும் எதி­ராக அமைந்­து­வி­டு­கின்­றன’’ என நய்முர் தெரி­வித்தார்