இலங்கையின் வளர்ந்து வரும் ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க பத்திரகேயின் விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 10 மில்லியன் ரூபா (ஒரு கோடி) நிதியுதவியை வழங்கியுள்ளது.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் நிறைவேற்றுக் குழுவின் வழிகாட்டலின் கீழ் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியுதவிக்கான உத்தியோகபூர்வ காசோலை நேற்று (28) மாலை இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் வைத்து ருமேஷ் தரங்கவிடம் கையளிக்கப்பட்டது.
ஈட்டி எறிதலில் உலக சாதனையாளர்களை வீழ்த்தி இலங்கையின் ருமேஷ் தரங்க முதலிடம்
கிரிக்கெட் விளையாட்டிற்கு அப்பால், நாட்டின் ஏனைய விளையாட்டுத் துறைகளையும் ஊக்குவிக்கும் நோக்கோடும், சர்வதேச மட்டத்தில் பதக்கங்களை வெல்லக்கூடிய ஆற்றல் கொண்ட வீரர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கும் இலங்கை கிரிக்கெட்; நிறுவனத்தின் தொடர்ச்சியான சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கென்யாவின் நைரோபியில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற 2026 'கிப் கெய்னோ கிளாசிக்' மெய்வல்லுநர் தொடரில் முதல் தடவையாக பங்குகொண்ட ருமேஷ் தரங்க புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தாhர்.
உலக மெய்வல்லுநர் சம்மேளனத்தின் 'கோல்ட் லெவல்' அந்தஸ்து கொண்ட போட்டியொன்றில் பங்குபற்றி பதக்கம் வென்ற முதல் வீரராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார். அதேபோல, கடந்த மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியொன்றில் 89.37 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து புதிய இலங்கை சாதனையும் அவர் படைத்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<
The third edition of the annual cricket encounter between St. Anthony’s College, Wattala, and St. Joseph Vaz College, Wennappuwa, famously known as the “Battle...
Special moments from the 41st Limited Overs Encounter as St. Sebastian's College Moratuwa take on Prince of Wales' College Moratuwa—capturing the build-up, emotions, and...
Sri Lanka’s cricket fraternity is awaiting the arrival of new Head Coach Gary Kirsten, who is expected on the island shortly, with his first assignment...